Editorial News Editorial News

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இறுதி வாக்காளர் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 (6,26,74,446) வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேர் இடம்பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்திலேயே சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும், துறைமுகம் தொகுதி குறைந்தபட்ச வாக்காளர்களைக் கொண்டதாகவும் உள்ளது.

அதன்படி, 6,94,845 வாக்காளர்கள் சோழிங்கநல்லூர் தொகுதியிலும், துறைமுகத்தில் 1,76,272 வாக்காளர்களும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்து 98 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட , பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். தபால் வாக்கு அளிப்பதற்காக சிறப்பு படிவம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமானோர், தபால் வாக்கு போட தகுதி பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related posts

Tom Hanks and Rita Wilson tested positive for coronavirus

Penbugs

350 police officers in quarantine to make up August 15 guard of honor

Penbugs

தமிழகத்தில் இன்று 161 பேருக்கு தொற்று உறுதி…!

Penbugs

ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.7,500; மத்திய அரசுக்கு காங்., குழு சிபாரிசு

Penbugs

23 YO Aishwarya Sridhar wins ‘Wildlife photographer of the year’

Penbugs

I suffer from anxiety, exercise keeps me in check: Shruti Haasan

Penbugs

One of the oldest Train guards turns 100, Central Railways to double his pension

Penbugs

Book predicted coronavirus 40 years ago!

Penbugs

Rajinikanth clears about his deleted video

Penbugs

முகநூலில் சுயவிவரங்களை லாக் செய்யும் புதிய வசதி இந்தியாவில் அறிமுகம்!

Kesavan Madumathy

டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் – தமிழக அரசு!

Kesavan Madumathy

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!

Kesavan Madumathy

Leave a Comment