Editorial News Editorial News

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இறுதி வாக்காளர் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 (6,26,74,446) வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேர் இடம்பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்திலேயே சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும், துறைமுகம் தொகுதி குறைந்தபட்ச வாக்காளர்களைக் கொண்டதாகவும் உள்ளது.

அதன்படி, 6,94,845 வாக்காளர்கள் சோழிங்கநல்லூர் தொகுதியிலும், துறைமுகத்தில் 1,76,272 வாக்காளர்களும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்து 98 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட , பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். தபால் வாக்கு அளிப்பதற்காக சிறப்பு படிவம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமானோர், தபால் வாக்கு போட தகுதி பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related posts

Zomato, Swiggy resume restricted services along with groceries and other essentials in Tamil Nadu

Penbugs

மூடப்பட்ட பள்ளி ; கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி

Penbugs

ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கலாம்

Kesavan Madumathy

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

Penbugs

Growth achieved by Larsen & Toubro in a challenging year

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 5,210 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

Kesavan Madumathy

Power shutdown in parts of Chennai on December 10th

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Penbugs

Battle for Tamil will be bigger than Jallikattu: Kamal Haasan

Penbugs

IPL 2020: Lasith Malinga likely to miss tournament

Penbugs

மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்- தமிழக அரசு

Penbugs

Costa Rica becomes 1st Central American country to legalize same sex marriage

Penbugs

Leave a Comment