Coronavirus

தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பு மையம் துவங்க சென்னை மாநகராட்சி அனுமதி

கொரோனா நோயாளிகளை, படுக்கை வசதி உடைய மருத்துவமனைகளுடன் அந்த அந்த பகுதிகளில் தங்க வைத்து சிகிக்சை அளிப்பதற்காக கொரோனா கட்டுப் பாட்டு மையங்கள் துவங்கப்பட்டுள்ளது.

இதற்கு தனியார் மருத்துவமனைகள் அல்லது விடுதிகள் உடைய விருப்பமுள்ளவர்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இது குறித்த தமிழக அரசின் செய்தி :

நோவல் கொரோனா வைரஸ் காய்ச்சல் (COVID – 19 ) உலகமெங்கும் பரவியுள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகமெங்கும்
அவசர நிலையினை (Public Health Emergency of International Concern (PHEIC)) பிரகடனப்படுத்தியுள்ளது.

மேலும் கட்டுப்படுத்தக்கூடிய தொற்று
நோயாகவும் (Controllable Pandemic) அறிவித்துள்ளது.

தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்
நோவல் கொரோனா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் தற்போது அதிகரிக்க
தொடங்கியுள்ள காரணத்தினால் அதாவது நாளொன்றுக்கு 2000 முதல் 2500
நபர்கள் வரை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 12 கொரோனா நோய் பரிசோதனை மையங்கள் ( (Screening Centres) மூலம் உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவமனை சிகிச்சை, கோவிட் பராமரிப்பு மைய சிகிச்சை அல்லது வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளும்
வசதி ஆகிய முறைகளில் ஒரு வழியில்
கொரோனா தொற்று கண்டவர்களுக்கு மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி 14 கோவிட் பாதுகாப்பு மையங்களில் 11,000 படுக்கைகளுடன் மிக குறைந்த தொற்று
உள்ளவர்களுக்கும் மற்றும் அரசு மருத்துவமனை மூலம் பரிந்துரைக்கப்படுவர்களுக்கும் போதுமான மருத்துவ வசதிகளுடன் சிகிச்சை
அளிக்க வசதி ஏற்படுத்தியுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் மற்றும் கொரோனா தொற்று
கண்டவர்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே சிகிச்சை பெரும் பொருட்டும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விருப்பமுள்ள மற்றும் சிகிச்சை அளிக்க போதிய உட்கட்டமைப்பு வசதியுள்ள தனியார்
மருத்துவமனைகள் தனியாகவோ அல்லது பிற தங்கும் விடுதிகளுடன் (Covid Care
இளைந்தோ கொரோனா நோய் பாதுகாப்பு மையங்கள் (Centres) ஆரம்பிக்க அனுமதி அளிக்கிறது.

அவ்வாறு கொரோனா நோய் பாதுகாப்பு மையங்கள் (Covid Care
Centres) தொடங்க விருப்பமுள்ள மருத்துவமனைகள் படுக்கை வசதி,
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடுதல் மாநகர நல அலுவலர் (தலைமையகம்)(9445026050) அவர்களை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

Related posts

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா

Penbugs

சிட்டு..!

குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

Kesavan Madumathy

கொரோனா மரணத்தில் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

Penbugs

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் பாடகர் எஸ்பிபி

Penbugs

அண்ணா பல்கலைகழகத்தை ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சி அறிக்கை…!

Penbugs

தமிழகத்தில் இன்று 5,554பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

COVID19 in TN: 509 positive cases

Penbugs

Deepika Padukone tests COVID19 positive after her family

Penbugs

எஸ்.பி.பி. பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் – நடிகர் சல்மான்கான்

Penbugs

Priest beheads a man in Odisha claiming to put an end to Coronavirus

Penbugs

Sonu Sood to provide food to 25000 migrant workers

Penbugs

Leave a Comment