உலகம் முழுவதும் கொரோனோவின் தாக்கம் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்திய அரசும் , மாநில அரசுகளும் தங்களால் இயன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன .தமிழகத்தில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த கொரோனா உடையவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக கணிசமான எண்ணிக்கையில் உயர்ந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .இந்நிலையில் சென்னை முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பினை அறிவித்ததுள்ளது அந்த அறிவிப்பின்படி மாநகராட்சி ஊழியர்கள் வீடுதோறும் வந்து மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வார்கள் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது …!