19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு – அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கு
சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும்.
சென்னையில் வங்கிகள் ஜூன் 29, 30 ஆகிய நாட்களில் மட்டுமே செயல்படும்
அத்தியாவசிய பொருள் வாங்குபவர்கள் வாகனங்கள் பயன்படுத்தக் கூடாது; அத்தியாவசிய பொருள் வாங்குபவர்கள் 2 கி.மீ தூரத்திற்குள் சென்றுதான் வாங்க வேண்டும்