Editorial News

கோயம்புத்தூர் சாந்தி சோசியல் சர்வீஸ்’ சுப்பிரமணியம் காலமானார்

கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78) உடல்நலக் குறைவால் இன்று (11/12/20) அதிகாலை மரணமடைந்தார்.

கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 இல் வாகனங்களுக்கான கியர் உள்ளிட்ட இயந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியை தொடங்கினார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பை சுப்பிரமணியம் தொடங்கினார்.

உணவகம், மருத்துவமனை, மருந்தகம், பெட்ரோல் பங்க் போன்றவற்றை நடத்தி லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார்.


மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு தினசரி இலவச உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30 ரூபாய், மருந்தகங்களில் 30 சதவீதம் விலை குறைவில் அனைத்து மருந்துகளும் விற்பனை, குறைந்த விலையில் மருத்துவப்பரிசோதனை செய்யப்படுவதால் தினசரி நூற்றுக்கணக்கானோர் சாந்தி கியர் மருத்துவ சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஊடகங்களில் முகத்தை காட்டுவதில்லை என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்தவர் சுப்பிரமணியம்.


இந்நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சுப்ரமணியம் மறைவால் கோவையைச் சேர்ந்த மக்கள் பெரிதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related posts

Joe Biden wins US Presidential elections

Penbugs

மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

Penbugs

Scotland becomes 1st country to make sanitary pad, tampons free

Penbugs

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள்

Penbugs

Pakistan admits that Dawood Ibrahim is in Karachi

Penbugs

Breaking- PSL 2021 Postponed

Penbugs

தைப்பூசத் திருவிழாவிற்கு இனி பொதுவிடுமுறை- முதல்வர் எடப்பாடி

Penbugs

1st look of Nithya Menen in Gamanam

Penbugs

மத்திய பட்ஜெட் அறிவிப்பு ; தமிழகத்திற்குபுதிய திட்டங்கள்

Penbugs

அம்மா நகரும் நியாய விலைகடைகள் திட்டம் துவக்கம்

Penbugs

James Pattinson to replace Lasith Malinga in IPL 2020

Penbugs

பிரபல சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் காலமானார்

Penbugs

Leave a Comment