Editorial News

கோயம்புத்தூர் சாந்தி சோசியல் சர்வீஸ்’ சுப்பிரமணியம் காலமானார்

கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78) உடல்நலக் குறைவால் இன்று (11/12/20) அதிகாலை மரணமடைந்தார்.

கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 இல் வாகனங்களுக்கான கியர் உள்ளிட்ட இயந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியை தொடங்கினார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பை சுப்பிரமணியம் தொடங்கினார்.

உணவகம், மருத்துவமனை, மருந்தகம், பெட்ரோல் பங்க் போன்றவற்றை நடத்தி லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார்.


மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு தினசரி இலவச உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30 ரூபாய், மருந்தகங்களில் 30 சதவீதம் விலை குறைவில் அனைத்து மருந்துகளும் விற்பனை, குறைந்த விலையில் மருத்துவப்பரிசோதனை செய்யப்படுவதால் தினசரி நூற்றுக்கணக்கானோர் சாந்தி கியர் மருத்துவ சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஊடகங்களில் முகத்தை காட்டுவதில்லை என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்தவர் சுப்பிரமணியம்.


இந்நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சுப்ரமணியம் மறைவால் கோவையைச் சேர்ந்த மக்கள் பெரிதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related posts

Breaking: The latest sport to feature in an Olympic Games

Aravindhan

58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மோடி

Penbugs

சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை

Penbugs

Former Australian Cricketer Dean Jones passes away

Penbugs

WarnerMedia to halt HBO and WB channels across South Asia

Penbugs

தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்பு

Kesavan Madumathy

Emmy Awards 2020- Full list of winners

Penbugs

Well done Rafa, you deserve it: Roger Federer

Penbugs

Bigg Boss Tamil 4, Day 42, Written Updates

Lakshmi Muthiah

Apollo Hospitals Performs total femur replacement on a child with osteosarcoma

Anjali Raga Jammy

நேரடி‌ வகுப்புகள் கல்லூரிகளில் ரத்து: தமிழக அரசு

Penbugs

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

Penbugs

Leave a Comment