Coronavirus Politics

கொரோனா நிவாரண நிதி வழங்குக ; முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குக, நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தற்போது நமது மாநிலத்தில் 1,52,389 பேர் இத்தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 31,410 பேர் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த அலை நமது மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பின்மீதும் மக்கள்மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரலாறு காணாத இந்தச் சவாலை சமாளிக்கவும், மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும், நமது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் தடையின்றி கிடைக்கச் செய்தல், ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்துதல், கூடுதல் மருத்துவ மற்றும் பிற பணியாளர்களைப் பணி அமர்த்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமப்பட்டுவரும் நிலையில் இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு நமது அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவையும் உள்ளது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இத்தகைய இடர்ப்பாடுகளே மனித நேயத்தை வெளிப்படுத்துவதற்குச் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன. நாம் அனைவரும் ஒன்றுகூடி இப்போரை வெல்வதற்கான நேரம் இது.

இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கின்றேன். இப்பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்.

மேற்கூறிய நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் மற்றும் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(G)-ன்கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஓழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50-ன்கீழ் விலக்களிக்கப்படும்.

என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 2532 பேர் பாதிப்பு …!

Kesavan Madumathy

Air India Express: Pilot and Co-pilot dead after crash

Penbugs

குடைப்பிடிப்பது கட்டாயம், கொரோனா பரவலை தடுக்க கேரளாவில் புதுமையான யோசனை

Penbugs

England clinch the first Test against Pakistan

Penbugs

Shahid Afridi tested positive for COVID19

Penbugs

Just because bars are opening, doesn’t mean they are safe: Matthew Perry

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2396 பேர் பாதிப்பு

Kesavan Madumathy

COVID19 in Tamil Nadu: No relaxation, lockdown to continue till May 3, CM announces

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1982 பேருக்கு கொரோனா உறுதி!

Kesavan Madumathy

Jofra Archer talks about unfair criticism and racist replies during lockdown

Gomesh Shanmugavelayutham

Pak spies using fake ‘Aarogya Setu’ app to target Indian Military personnel

Penbugs

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

Kesavan Madumathy

Leave a Comment