Coronavirus

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

முதலமைச்சர் உத்தரவின் பேரில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சிறுவில்வம், திப்பிலி வேர், தலமூலம் உள்ளிட்ட 17 மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேத மருந்தான இந்துகாந்த கஷாயம், கடுக்கய் உள்ளிட்ட 27 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் அகஸ்திய ரசாயனம் மற்றும் வெண்பூசணி உள்ளிட்ட 11 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் கூஷ்மாண்ட ரசாயனம் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது என விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இவற்றை காலை மற்றும் இரவு என இருவேளை சாப்பிட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும்.

இம்மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத சிகிச்சை பிரிவுகளில் எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

Related posts

As lockdown eased, huge crowd seen playing cricket at T Nagar’s Somasundaram Ground

Penbugs

முகக்கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை – சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Penbugs

KBC junior winner Ravi Mohan is SP of Porbandar now!

Penbugs

ஒரு ரேபிட் கிட்டின் விலை ரூ.600 – தமிழக அரசு

Penbugs

ஒரே நாளில் 1,600-ஐ தாண்டிய கொரோனா நோய் தொற்று

Penbugs

Bhopal: Four month old girl defeats COVID19

Penbugs

Ahead of Diwali, Chennai’s Ranganathan Street sees huge crowd

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

COVID19: Afghanistan’s teenage girls’ team is building cheap ventilators

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

தமிழக அரசின் முடிவை ஏற்க மறுத்த ஏஐசிடிஇ

Penbugs

Leave a Comment