தமிழகத்தில் ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது
சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1149 பேருக்கு வைரஸ் பாதிப்பு
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 33,229 பேர் பாதிப்பு
சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை 17,527 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு
தமிழ்நாட்டில் இதுவரை 286 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது
வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு
மகாராஷ்டிராவில் இருந்து வந்த 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
குவைத், கத்தாரில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 12 பேருக்கு வைரஸ் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 57 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி
வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கும், காஞ்சியில் மேலும் 18 பேருக்கும் பாதிப்பு
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 14,982 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.