Coronavirus

கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதியை சேர்ந்தவர் பாலக்கோரூ மங்கம்மா.

101 வயதான இந்த மூதாட்டிக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில் குணமடைந்த அவர், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனை இயக்குனர் வெங்கம்மா, கண்காணிப்பாளர் ராம் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மங்கம்மாவின் குடும்பத்தினர்கள் நன்றி தெரிவித்தனர்.

அப்போது மருத்துவர் ராம் பேசுகையில், `உலகமே கொரோனா வைரஸ் கண்டு அச்சமடைந்து வரக்கூடிய நிலையில் 101 வயது மூதாட்டி மங்கம்மா தைரியத்துடன் கொரோனா வைரசை எதிர்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்.

அவரது மன தைரியம் அவரை தற்போது பூரண குணத்துடன் வீடு செல்வதற்கு உதவியாக இருந்தது. எனவே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எந்த காரணத்தை கொண்டும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் கொரோனாவிலிருந்து முழு குணம் அடையலாம் என்பதற்கு மங்கம்மா ஒரு உதாரணம்’’ என்றார்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Actor… Warrior… Inspiration… Sonu Sood

Penbugs

Cricket with empty stands: Ireland raises white ball visibility issues

Penbugs

Sam Curran tested negative for COVID19

Penbugs

எய்ட்ஸ் போல் கொரோனா வைரசும் சமூகத்தில் இருக்கும் : உலக சுகாதார அமைப்பு தகவல்!

Penbugs

தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா தொற்று இல்லா கேரளம்

Penbugs

ENG v WI, 2nd Test: Root returns, Denly misses out

Penbugs

Netizens help Kenyan woman who pretended to cook stones as food for her starving kids

Penbugs

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை

Kesavan Madumathy

COVID19: Single street in Triplicane has whooping 42 positive cases

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Leave a Comment