Coronavirus

கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதியை சேர்ந்தவர் பாலக்கோரூ மங்கம்மா.

101 வயதான இந்த மூதாட்டிக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில் குணமடைந்த அவர், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனை இயக்குனர் வெங்கம்மா, கண்காணிப்பாளர் ராம் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மங்கம்மாவின் குடும்பத்தினர்கள் நன்றி தெரிவித்தனர்.

அப்போது மருத்துவர் ராம் பேசுகையில், `உலகமே கொரோனா வைரஸ் கண்டு அச்சமடைந்து வரக்கூடிய நிலையில் 101 வயது மூதாட்டி மங்கம்மா தைரியத்துடன் கொரோனா வைரசை எதிர்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்.

அவரது மன தைரியம் அவரை தற்போது பூரண குணத்துடன் வீடு செல்வதற்கு உதவியாக இருந்தது. எனவே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எந்த காரணத்தை கொண்டும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் கொரோனாவிலிருந்து முழு குணம் அடையலாம் என்பதற்கு மங்கம்மா ஒரு உதாரணம்’’ என்றார்.

Related posts

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

Coronavirus pandemic could last beyond 2022: Reports

Penbugs

இரண்டாயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 1982 பேருக்கு கொரோனா உறுதி!

Kesavan Madumathy

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஊஹானில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்ததாக அதிகாரிகள் தகவல்

Penbugs

Chile: Police trains Sniffer dogs to detect COVID19 in early stages

Penbugs

கொரோனா சிகிச்சை அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விவேக்

Penbugs

COVID19: Gibbs to auction bat he used for chasing 438

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

சென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடல்

Penbugs

கொரோனா பரவலை தடுக்க யோசனை தந்த நடிகர் அஜித்!

Kesavan Madumathy

Leave a Comment