Coronavirus

கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதியை சேர்ந்தவர் பாலக்கோரூ மங்கம்மா.

101 வயதான இந்த மூதாட்டிக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில் குணமடைந்த அவர், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனை இயக்குனர் வெங்கம்மா, கண்காணிப்பாளர் ராம் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மங்கம்மாவின் குடும்பத்தினர்கள் நன்றி தெரிவித்தனர்.

அப்போது மருத்துவர் ராம் பேசுகையில், `உலகமே கொரோனா வைரஸ் கண்டு அச்சமடைந்து வரக்கூடிய நிலையில் 101 வயது மூதாட்டி மங்கம்மா தைரியத்துடன் கொரோனா வைரசை எதிர்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்.

அவரது மன தைரியம் அவரை தற்போது பூரண குணத்துடன் வீடு செல்வதற்கு உதவியாக இருந்தது. எனவே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எந்த காரணத்தை கொண்டும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் கொரோனாவிலிருந்து முழு குணம் அடையலாம் என்பதற்கு மங்கம்மா ஒரு உதாரணம்’’ என்றார்.

Related posts

Supermachans turn 6 | Chennaiyin FC

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 4,743 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

India invites developers to create Zoom alternative; 1 Crore prize money

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Chelsea FC writes to Abhishek Bachchan over COVID19

Penbugs

Confirmed: IPL finals to take place on November 10

Penbugs

சென்னையில் வரும் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு

Kesavan Madumathy

தமிழக அரசின் முடிவை ஏற்க மறுத்த ஏஐசிடிஇ

Penbugs

தமிழகத்தில் இன்று 5742 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

Steve Smith thinks saliva ban is not a great move

Penbugs

Actor Aishwarya Arjun tested positive for coronavirus

Penbugs

Leave a Comment