Coronavirus

இ‌பாஸ் தளர்வால் சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்

சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,355 பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இ-பாஸ் என்னும் நடைமுறை அமலுக்கு வந்தது.

இதன்படி ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கோ, ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கோ செல்ல வேண்டுமென்றால் இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது.

இ-பாஸ் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்த போதிலும், தமிழகத்தில் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.

மண்டலம் விட்டு மண்டலம் என்ற நிலை மாறி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற கடுமையான விதி பின்பற்றப்பட்டது.

திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் அளிக்கப்பட்டு வந்தது.

மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தாலும் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். இ-பாஸ் பெறுவதற்கு இடைத்தரகர்கள் லஞ்சம் வாங்கிய சம்பவமும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது

இந்த நிலையில், 17-ந் தேதி முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் செல்போன் எண்ணை இணைத்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இன்றி உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் விண்ணப்பித்து, இ-பாஸ் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம் என்றும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி இ-பாஸ் நடைமுறை தளர்வு 17-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்தநிலையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,335 பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர்‌.

Related posts

தமிழகத்தில் இன்று 5492 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம்- இத்தாலி அறிவிப்பு !

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் : ஸ்டாலின்

Penbugs

இரண்டாயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Kesavan Madumathy

ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் விநியோகம் | தமிழ்நாடு

Kesavan Madumathy

Lockdown 4.0: Sports complexes, stadia to be opened | New Guidelines

Penbugs

COVID19 in Chennai: 1st Police official who tested positive, recovers, joins duty today

Penbugs

COVID19: More than 3000 contacts untraceable as Karnataka sees huge spike

Penbugs

Karun Nair recovers from COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 5,554பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

COVID19: NDMA announces National Lockdown extension till May 31

Penbugs

Leave a Comment