Penbugs
Cinema

எந்த பிடிவாரண்டும் எனக்கு பிறப்பிக்கப்படவில்லை – இயக்குநர் ஷங்கர் அறிக்கை

எந்திரன் கதை திருட்டு வழக்கில் தனக்கு எந்த பிடிவாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என அந்தப் படத்தின் இயக்குநர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார்‍.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழும்பூர் நீதிமன்றம் தனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இணையத்தில் நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறே இதற்கு காரணம் எனக் கூறியுள்ள ஷங்கர், அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்‍.

மேலும் இது போன்ற பொய்யான செய்திகள் இனி‌ பரவாது என்பதை உறுதி செய்ய, எனது இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பகிர வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

Leave a Comment