Penbugs
Editorial News

இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? திமுக எம்பி கனிமொழி கேள்வி

சென்னை விமான நிலையத்தில் இந்தி தெரியாது எனக் கூறியதற்காக, “ நீங்கள் இந்தியரா” என பெண் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவர் தம்மைப் பார்த்து கேள்வி எழுப்பியதாக கனிமொழி டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை எப்போதிலிருந்து உருவானது என்பதை அறிய விரும்புவதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சி.ஐ.எஸ்.எஃப், சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் எந்த ஒரு மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எஃப்பின் நோக்கம் அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் திமுக எம்.பி.,கனிமொழி புகார் தொடர்பாக சிஐஎஸ்எஃப் அதிகாரியை விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவிட்டுள்ளது.

விமான நிலையத்தில் யாரிடமும் மொழி தொடர்பாக கேட்பதுமில்லை எனவும்,
சிஐஎஸ்எஃப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிஐஎஸ்எஃப் அவரது பயண விவரங்களை கோரியுள்ளது

Related posts

“Do you Cook?”, asks reporter, MP Kanimozhi shuts down reporter’s sexist question with a smile

Penbugs

Leave a Comment