Editorial News

தமிழகம் முழுவதும் Friends of Police அமைப்புக்கு தடை

தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு உதவுவதற்காக 1993 ஆம் ஆண்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற காவல்துறை நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த சிலரும் போலீசாருடன் இணைந்து தாக்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தடை விதித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, காவல் நிலையங்கள் மற்றும் ரோந்து பணிகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரை ஈடுபடுத்தக்கூடாது என்று காவல் உயரதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் டிஜிபி அளித்த அறிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,683 ஆக அதிகரித்தது..!

Penbugs

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம் இன்று திறப்பு

Kesavan Madumathy

TN Govt school students to be taught via TV

Penbugs

விபத்தில் சிக்கிய குஷ்பு!

Penbugs

COVID-19: Milk will not be sold after 9 am in TN

Penbugs

Vijay Mallya to be flown, lodged in Mumbai on extradition: Report

Penbugs

Banning apps not enough, need to give befitting reply to China: WB CM Mamata Banerjee

Penbugs

Breaking: Basketball legend Kobe Bryant dies in helicopter crash

Penbugs

Jamia Millia Islamia Protests: In Pictures

Penbugs

COVID19: TN reports 96 new cases

Lakshmi Muthiah

P Chidambaram arrested by CBI

Penbugs

Leave a Comment