சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அந்த சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தண்டனை காலம் முடிந்து பெங்களூரு சிறையில் இருந்து ஜனவரி 27ந் தேதி சசிகலா விடுதலையாகிறார்
அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் விடுதலையாகும் தேதி தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.