Penbugs
Editorial News

கார்கில் வெற்றி தினமான இன்று தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் மரியாதை

கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக், முப்படைகளின் தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

1999ஆம் ஆண்டு மே மாதத்தில் காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினரை வெளியேற்றுவதற்காக இந்திய ராணுவத்தினர் போரிட்டனர். 3 மாதங்கள் நீடித்த இந்தப் போர் ஜூலை 26ஆம் நாள் முடிவுக்கு வந்தது.

இந்தப் போரில் இந்திய ராணுவத்தில் ஐந்நூற்றுக்கு மேற்பட்டோரும், பாகிஸ்தான் ராணுவத்தில் எழுநூற்றுக்கு மேற்பட்டோரும் உயிரிழந்தனர்.

கார்கில் போரின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி டெல்லியில் போர் நினைவுச்சின்னத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங், விமானப்படைத் தளபதி ராகேஷ்குமார் சிங் படாரியா ஆகியோர் கலந்துகொண்டு, போரில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டைக் காக்கும் பணியில் வீரர்களின் உயிர்த்தியாகத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

Related posts

350 police officers in quarantine to make up August 15 guard of honor

Penbugs

Wheelchair cricketer turns labourer due to lockdown

Penbugs

Let’s CELEBRATE RESPONSIBLY!

Penbugs

இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த ஆப்களை உருவாக்க புதிய திட்டம் – பிரதமர் மோடி

Penbugs

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்குத் தடை: தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

Delhi police release CCTV pics, blame Left groups for attack; Ghosh among 9 suspects identified

Penbugs

Rwanda finally releases 50 women jailed over abortions

Penbugs

Timeline of Former CM J Jayalalithaa’s letter to PM against NEET

Penbugs

Police Station celebrates conviction of two rapists

Penbugs

மும்பையில் ஊடகத்துறையினர் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு…!

Penbugs

Steps taken to ensure no scarcity of essential products: PM Modi

Penbugs

Vijay Mallya is not to be extradited soon: Reports

Penbugs

Leave a Comment