Coronavirus Editorial News

குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் ; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

சென்னை தியாகராயர் நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் என்பது குறைந்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்பாக தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அதிகளவில் கூட்டம் சேர்க்கக்கூடாது.

உள்ளே வரக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களும் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடையில் விதிமுறைகளை பின்பற்றாமல் சமூக இடைவெளியின்றி அதிக கூட்டம் கூடியதையடுத்து தற்போது அந்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

குறிப்பாக நேற்று அதிகளவில் வாடிக்கையாளர் குவிந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.

இதனையடுத்து ஊழியர்களை வெளியே வருமாறு கூறிவிட்டு கடைக்கு முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல விதிகளை மீறும் கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

Yogi Babu helps small screen technicians

Penbugs

BCCI issues IPL SOP guidelines to franchises

Penbugs

தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓபிஸ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

குக் வித் கோமாளி பைனல்ஸில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

Kesavan Madumathy

Chennai police file FIR on Varadharajan for spreading ‘false news’

Penbugs

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

Ravi Shastri gets first dose of COVID-19 vaccine

Penbugs

தமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Penbugs

மே 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ 2000 நிவாரணம்

Kesavan Madumathy

Harmanpreet Kaur tested positive for coronavirus

Penbugs

Happy Birthday, Ellyse Perry

Penbugs

Leave a Comment