Editorial News

மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஏழரை சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், இடஒதுக்கீட்டுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் குறைந்த அளவிலேயே வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைப்படி, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்து.

இதன் மூலம், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்பில் சேர முடியும். ஆனால், மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், விரைவில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற இருப்பதால், 162 வது சட்டப்பிரிவின் கீழ் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதியே அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

குடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்

Penbugs

Rohit Sharma will not travel to Australia until he clears fitness test

Penbugs

Naomi Osaka- The Role Model

Penbugs

Chinese Billionaire Jack Ma suspected missing

Penbugs

சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பிடித்த Paytm

Penbugs

மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

Penbugs

சட்டபேரவை தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Kesavan Madumathy

Bigg Boss Tamil 4, Day 42, Written Updates

Lakshmi Muthiah

கண் தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்மவிபூஷண் விருது அறிவிப்பு..!

Penbugs

இருசக்கர வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டுக் கருவி: உயர் நீதிமன்றம் உத்தரவு

Kesavan Madumathy

Leave a Comment