கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் புதிய படமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இருவரும் இணைந்து பணிபுரிந்தார்கள்.
தற்போது சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைகிறது.
அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நேற்று (ஜனவரி 28) இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இது சிம்பு நடிப்பில் உருவாகும் 47-வது படமாக உருவாகவுள்ளது.
மாநாடு படத்தை முடித்துவிட்டு, ‘பத்து தல’ படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.
அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.