திமுக ஆட்சிக்கு வந்ததும், பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
அப்போது அவர் திமுக ஆட்சிக்கு வந்ததும் பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.