Coronavirus

பிரதமா் மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

பிரதமரின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று சூழல் தொடா்பாகவும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான வியூகங்கள் தொடா்பாகவும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவிலும் தீவிரமாகியுள்ளது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாட்டில் கடந்த மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்டிருந்த தேசிய ஊரடங்கு, பின்னா் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்பொருட்டு சில தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடந்த திங்கள்கிழமை முதல் ஊரடங்கிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. எனினும், கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு ஊரடங்கு தளா்வுகள் பொருந்தாது என்று அறிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.

Related posts

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைப்பு-தமிழக அரசு

Kesavan Madumathy

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

Penbugs

COVID19: Kerala CM Pinarayi Vijayan confirms community spread

Penbugs

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம்

Penbugs

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

Penbugs

சவுரவ் கங்குலி தன்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

Kesavan Madumathy

Man dressed as Santa, distributes mask and sanitizers

Penbugs

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

கொரோனா நோய்த் தொற்று உறுதி ; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

Penbugs

As lockdown eased, huge crowd seen playing cricket at T Nagar’s Somasundaram Ground

Penbugs

தமிழக அரசின் உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா உறுதி…!

Kesavan Madumathy