Coronavirus

பிரதமா் மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

பிரதமரின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று சூழல் தொடா்பாகவும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான வியூகங்கள் தொடா்பாகவும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவிலும் தீவிரமாகியுள்ளது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாட்டில் கடந்த மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்டிருந்த தேசிய ஊரடங்கு, பின்னா் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்பொருட்டு சில தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடந்த திங்கள்கிழமை முதல் ஊரடங்கிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. எனினும், கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு ஊரடங்கு தளா்வுகள் பொருந்தாது என்று அறிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.

Related posts

Pallavaram: Migrant workers protest demanding to send back home

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,059 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Sonu Sood takes responsibility of three orphan children

Penbugs

அக். 1 முதல் திரையரங்குகள் திறப்பு ..!

Penbugs

டாக்டர்களுக்கு சல்யூட் – சிவகார்த்திகேயன்!

Penbugs

இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்

Kesavan Madumathy

Floods: Arsenal, Pietersen prays for people of Assam

Penbugs

Over 100 COVID19 cases reported at IIT Madras campus

Penbugs

கொரோனாவால் இறந்தவர்களுக்கு மக்கள் உரிய மரியாதை வழங்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

Kesavan Madumathy

COVID19 in Rajasthan: Ajmer bans photography while distributing foods

Penbugs

COVID19: Sonu Sood contributes 25,000 face shields for Maharashtra Police

Penbugs