Coronavirus

பிரதமா் மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

பிரதமரின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று சூழல் தொடா்பாகவும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான வியூகங்கள் தொடா்பாகவும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவிலும் தீவிரமாகியுள்ளது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாட்டில் கடந்த மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்டிருந்த தேசிய ஊரடங்கு, பின்னா் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்பொருட்டு சில தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடந்த திங்கள்கிழமை முதல் ஊரடங்கிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. எனினும், கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு ஊரடங்கு தளா்வுகள் பொருந்தாது என்று அறிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.

Related posts

Day 2, ENG v WI: Holder’s six puts visitors on top

Penbugs

After donating to relief fund, Mithali Raj distributes food and essentials packets

Penbugs

தமிழகத்தில் இன்று 2817 பேருக்குக் கொரோனா தொற்று

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ‌1385 பேருக்கு கொரோனா

Penbugs

Akshay Kumar tests positive for coronavirus

Penbugs

COVID19: Man rescued by Sonu Sood, names his shop after him

Penbugs

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Penbugs

Covid19 treatment: Patanjali launches coronil kit, claims 100% recovery

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,059 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் 76.98 சதவிகிதமாக உயர்வு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1443 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

முகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு

Penbugs