அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், அவரின் மகள் ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில், ஜஸ்வர்யா ராய் மற்றும் அவரின் குழந்தைக்கு ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 11ம் தேதி உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்களும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர்.
Read: https://penbugs.com/covid19-aishwarya-rai-bachchan-taken-to-hospital-now/
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யா ஆகியோரின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஐஸ்வர்யாராய்க்கு இருந்த வந்த இருமல் தற்போது சுத்தமாக குறைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன.
இந்நிலையில் ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா ஆகியோர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனை ஐஸ்வர்யாவின் கணவரான அபிஷேக் பச்சன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.