சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நடிகை சித்ராவின் தற்கொலை குறித்து அவரது கணவர் ஹேம்நாத்திடம் கடந்த 6 நாட்களாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஹேம்நாத்தின் தந்தை, சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர், விடுதியின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சித்ராவின் தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து உள்ளனர்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட உள்ளார்.
கைது செய்யப்பட்ட ஹேம்நாத் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.