Coronavirus

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் உத்தரவு!

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் அடுத்த 6 மாத காலம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 2 ஆயிரத்து 715 சுகாதாரஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 6 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2 ஆயிரத்து 570 செவிலியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இச்செவிலியர்கள், ஆணை கிடைக்கப் பெற்ற மூன்று நாட்களுக்குள், பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்களும், தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்களும் பணியமர்த்தப்படுவார்கள்.

இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பினார் விஸ்வநாதன் ஆனந்த்!

Anjali Raga Jammy

நேரடி‌ வகுப்புகள் கல்லூரிகளில் ரத்து: தமிழக அரசு

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 4,743 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: After helping 25000 workers, Salman Khan to help 50 female ground workers

Penbugs

Usain Bolt tested positive for coronavirus

Penbugs

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

Penbugs

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: அமர்நாத் யாத்திரை 2020 ரத்து…!

Penbugs

Battle for Biscuits: Heartbreaking video of workers fight for biscuits in hunger

Penbugs

தமிழகத்தில் இன்று 6006 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

வீட்டிலேயே தனிமைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல் முறைகளை வெளியிட்டது தமிழக அரசு…!

Kesavan Madumathy

கொரோனா சிகிச்சை அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விவேக்

Penbugs

Actor Dhruva Sarja and wife Prerana tests positive for COVID19

Penbugs