Coronavirus

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் உத்தரவு!

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் அடுத்த 6 மாத காலம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 2 ஆயிரத்து 715 சுகாதாரஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 6 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2 ஆயிரத்து 570 செவிலியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இச்செவிலியர்கள், ஆணை கிடைக்கப் பெற்ற மூன்று நாட்களுக்குள், பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்களும், தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்களும் பணியமர்த்தப்படுவார்கள்.

இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Amid lockdown extension, Migrant workers protest at Mumbai Bus stand

Penbugs

COVID19: Tamil Nadu reports 66 new cases

Penbugs

ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் ப்ரணீதா

Penbugs

Rakul Preet Singh tested positive for COVID19

Penbugs

“கொரோனாவை கட்டுப்படுத்தும் கால அளவு இறைவனுக்குத்தான் தெரியும்!” – முதல்வர் பழனிசாமி

Kesavan Madumathy

செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5146 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

Overwhelming response for PM Modi’s 9 PM 9 minutes to eliminate COVID19 ‘darkness’

Penbugs

தமிழகத்தில் இன்று 6998 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Kasimedu fish market sees a massive crowd; could become a new cluster

Penbugs