Penbugs
Cinema

பழம்பெரும் ஒளிப்பதிவாளர் கண்ணண் காலமானார்

பாரதிராஜாவுடன் இணைந்து 40க்கும் அதிகமான படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம் .

சினிமாவில் பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பி கண்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பணியாற்றிய இவர் தமிழில் கிட்டத்தட்ட 50 படங்களில் பணியாற்றியுள்ளார்.

அதில் 40 படங்களுக்கு மேல் இயக்குனர்களின் இமயமான பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

தற்போது 69 வயதாகும் இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதியாக இவர் தமிழில் 1978 ஆம் ஆண்டு ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான உச்சிதனை முகர்ந்தால் என்ற திரைப்படத்தில் இறுதியாக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனாவார்.

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்

“பாரதிராஜாவின் கண்கள்” என வர்ணிக்கப்பட்டவர் கண்ணன்.