Coronavirus Editorial News

பீக் ஹவர்ஸை தவிர மற்ற நேரங்களில் பயணிகள் செல்ல அனுமதி

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை பொதுமக்கள் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு தெற்கு ரயில்வே தினசரி 244 புறநகர் சிறப்பு மின்சார ரயில்களை இயக்கி வருகிறது. இதற்கிடையே, கடந்த மாதம் 23-ம் தேதி முதல் அத்தியாவசிய பணிகள் பட்டியலின்கீழ் வராத பெண் பயணிகளை சாதாரண நேரங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் பயணிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது.

இருப்பினும், அத்தியாவசிய பணியாளர் பட்டியலின்கீழ் வராத பெண் பயணிகள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பயணிக்க அனுமதி இல்லை. மற்ற நேரங்களில் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மின்சார ரயில்களில் நாளை பொதுமக்கள் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், பீக் ஹவர்சில் பொதுமக்கள் மின்சார ரயில்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் (10 AM – 4 PM) அனைவரும் பயணம் செய்ய தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

Related posts

Allu Arjun tests positive for coronavirus

Penbugs

Scotland becomes 1st country to make sanitary pad, tampons free

Penbugs

COVID-19: Meet DRV, a Disaster Management Organisation working tirelessly to help people

Penbugs

கோயம்பேட்டில் ஐந்து ரூபாய்க்கு தானியங்கி கருவியில் முகக்கவசம் விற்பனை

Penbugs

Indian flag to be flown at half-mast today

Penbugs

JEE and NEET entrance exams to be scheduled in July 2020

Penbugs

ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் விநியோகம் | தமிழ்நாடு

Kesavan Madumathy

Covid19 treatment: Patanjali launches coronil kit, claims 100% recovery

Penbugs

ஆகஸ்டில் விற்பனைக்கு வருகிறது சிப்லாவின் கொரோனா சிகிச்சை மாத்திரை

Penbugs

Battled suicidal thoughts, depression: Robin Uthappa

Penbugs

COVID19 on 17th April: TN records 9344 cases today

Penbugs

Liberia declares rape a national emergency

Penbugs

Leave a Comment