Editorial News

ரம்ஜான் வாழ்த்துகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி…!

பொதுமக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்றும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டு வர வருகிற மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமலான் மாதத்தின் ஒருமாத காலம் நோன்பு, பிறை தெரிந்ததால் இன்று முதல் இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது.

தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் வழக்கங்களுக்கு பதிலாக வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என்றும், நோன்பு முடிக்க மாலையில் ஒன்று கூடுவதையும், இப்தார் நிகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும் என்றும் இஸ்லாமிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில், “ரம்ஜான் வாழ்த்துகள்! ஒவ்வொருவரும் பாதுகாப்புடனும், வளமுடனும் இருப்பதற்காக நான் பிராத்திக்கிறேன். இந்த புனிதமான மாதம் நமக்கு கருணை, மனிதநேயம், இரக்கத்தை கொண்டு வரட்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெறுவோம். ஆரோக்கியமான பூமியை உருவாக்குவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

Penbugs

India attacks terror camps across LoC in reply to Pulwama attack

Penbugs

கொரோனா சிகிச்சை அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விவேக்

Penbugs

3-time Delhi CM Sheila Dikshit passes away at 81!

Penbugs

Ghana Pallbearers to take a break from ‘coffin dance’ to thank health workers

Penbugs

Sophie Gregoire-Trudeau tested positive for Corona

Penbugs

COVID-19: Milk will not be sold after 9 am in TN

Penbugs

இந்தியா வந்து சேர்ந்த ரஃபேல் போர் விமானங்கள்

Penbugs

அமைச்சரிடம் ஸ்டாலின் நலம் விசாரிப்பு …!

Kesavan Madumathy

Badshah accused of buying fake YT views for 72 lakh, rapper denies claims

Penbugs

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4% அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

Facebook acquires GIPHY, to integrate more into Instagram

Penbugs