உலகமே கொரோனா பீதியில் இருக்கும் நிலையில் எகிப்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவரையே காதலித்து கரம் பிடித்துள்ள சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
எகிப்தில் 22 ஆயிரத்து 82 பேருக்கு பாதிப்பு உள்ளதாகவும் அதில் 879 பேர் பலியாகியுள்ளதாகவும் சிகிச்சைக்குப்பின் 5511 பாதிப்பிலிருந்து மீண்டும் உள்ளனர்.
Read: https://penbugs.com/sangakkara-on-famous-smile-after-2011-wc-loss/
எகிப்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ஆயிஷா மொசாபா, அவர் பணிபுரியும் மருத்துவமனையில் கொரோனா நோயாளியாக முகமது பாமி என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், அவருக்கு ஆயிசா தான் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார், சிகிச்சையின்போது நோயாளிக்கும் மருத்துவருக்கும் காதல் மலர்ந்துள்ளது,
2 மாத முழு சிகிச்சைக்குப்பின் பாமி வீடு திரும்பும் முன் ஆயிஷாவிற்கு தனது காதலை மோதிரம் அணிவித்து வெளிப்படுத்தினார், அதனை ஆயிஷாவும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார், இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.