சின்ன பொறி தான் அனலா மாறும்ன்னு சொல்லுவாங்க அது இன்னக்கி உறுதி ஆகியிருக்கு,
உனட்கட் ரெட் பால்ல செம்ம பிளேயர்ன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்,ஆனா T20 ஃபார்மட் முழுக்க முழுக்க அவரோட பெஸ்ட்ட அவரால கொடுக்கமுடியாம தவிச்சுட்டு இருந்தார் ராஜஸ்தான் அணில,
இந்த வருஷம் அவர் டீம்ல இருந்தப்பவும் ரெண்டு Left Hand Pacers – அ ஏலத்துல ராஜஸ்தான் அணி எடுத்தாங்க,ஒன்னு எக்ஸ்பீரியன்ஸ் பௌலரான பங்களாதேஷ் அணியை சேர்ந்த முஸ்தஃபிசூர் மற்றும் உனட்கட் கேப்டனாக இருக்கும் அதே சௌராஷ்ட்ரா டொமெஸ்டிக் அணியை சேர்ந்த சேட்டன் சகரியாவும் அணியில் எடுக்கப்பட்டு இன்று முதல் போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடினார் அதுவும் நியூ பாலில் ஓபன் செய்ததே இன்று அவர் தான்,
இருட்டா கிடந்த ஊருக்குள்ள ஒருத்தன் மட்டும் வெளிச்சத்தை தேடி கொண்டு வருவான்னு சொல்லுவாங்கல அது போல மற்ற அனைத்து பௌலர்களையும் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் பந்தாடிய போதிலும் தனி ஒருவனாய் களத்தில் தன்னுடைய லைன் மற்றும் வாரியேஷன் பந்துகளினால் அற்புதமாக பந்து வீசி முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளையும் கை பற்றியிருக்கிறார்,
இது முதல் போட்டி முதல் அனுபவம் தான்,இந்த தொடர் முழுவதும் அவருக்கு கிடைக்க போற வாய்ப்ப பெரியளவுல பயன்படுத்தி நிறைய விக்கெட்டுகள் எடுத்தாருன்னா இந்த ஐ.பி.எல் மூலமா பெரிய எதிர்காலம் காத்துட்டு இருக்கு,
ஒரு சின்ன தீப்பொறி போதும் ஒரு பெருங்காடையே அழிக்க,அது போல தான் இந்த சுள்ளானுக்கு பயம் இல்ல,தில்லுக்கு துட்டுன்னு தட்டி தூக்குவான்னு ஒரு நம்பிக்கை இருக்கு,எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும்,
- வாழ்த்துக்கள் சேட்டன் சகரியா..!!!
Picture Courtesy : Rajasthan Royals