தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், 5,441 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,20,827 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா தொற்றுக்கு 23 பேர் பலியாகினர்.
இதனால் மொத்தமாக கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,863 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று 1,890 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8,47,305 ஆக அதிகரித்துள்ளது.
