கணக்கில் தவறு நடந்துவிட்டது: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 50% அதிகரித்த சீனா
அதனையடுத்து, சீன அரசு, அந்நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பை குறைத்து காட்டுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டிவந்தது.
சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் ஜனவரி, ஃபிப்ரவரி மாதங்களில் ஊஹான் நகரை சிதைத்தது. சுமார், 82,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
அதனையடுத்து, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் மிக அதிக அளவில் பாதித்தனர். அந்த நாடுகளில் சீனாவில் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகமாக இருந்தது. அதேபோல, அமெரிக்காவிலும் ஏழு லட்சம் பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனையடுத்து, சீன அரசு, அந்நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பை குறைத்து காட்டுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டிவந்தது.
ஏற்கெனவே சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கின் எண்ணிக்கை 3,400-க்கைக் கடந்து இருந்த நிலையில் 1,290 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று இன்று சீனா அறிவித்துள்ளது. முன்னதாக கணக்கிடப்பட்டதில் தவறு ஏற்பட்டுள்ளது. பலரது மரணத்தை கணக்கிலிடத் தவறிவிட்டதாக சீனா அரசு ஒப்புக்கொண்டுள்ளது.