இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அவ்வாறு வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழகம் திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காக இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. தகவல்களை பெறுவதற்காகவும், எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் பதிவுகள் செய்திடுமாறு தமிழக அரசு
கேட்டுக்கொண்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!