Penbugs
Editorial News

சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம் இன்று திறப்பு

சேலம் மாநகரில் 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மற்றும் இரண்டடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

புதிய சேவை திட்டத்தின் கீழ் சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, ஐந்து ரோட்டை மையப்பகுதியாக கொண்டு இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 7.87 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக மிக பிரம்மாண்டமாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணா பூங்காவில் முடியும் பாலம் 5.01 கிலோமீட்டர் நீளம் கொண்டது. பாலத்தின் ஒரு பகுதி, ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சந்திப்பு வரை மூன்று கிலோமிட்டர் தூரம் கொண்டது.

அந்த பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜுன் 7-ம் தேதி திறந்துவைத்தார். குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான பாலம் கட்டும் பணி அனைத்தும் முடிவடைந்து விட்டதால் இன்று திறக்கப்படுகிறது.

பாலத்தின் இரு புறமும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு, பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திறக்கப்பட்டால் சேலம் 4ரோடு, ஐந்து ரோடு, ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் இல்லாத நிலை ஏற்படும்.

5 ரோடு அருகே இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார். பின்னர் பாலத்திலும் அவர் ஆய்வு செய்ய உள்ளார்.

அதனைத்தொடர்ந்து, சேலம் லீ பஜார் பகுதியில் 46 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தையும் முதலமைச்சர் திறந்து வைக்க இருக்கிறார்.

Related posts

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Kesavan Madumathy

வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ஊக்க தொகை – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy

விழுப்புரம் சிறுமி கொலை: முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம்!

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

வாட்ஸ்ஆப் அட்மின்களே ஜாக்கிரதை..! நீங்கள் கைதாகலாம்.!

Penbugs

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்

Penbugs

மூடப்பட்ட பள்ளி ; கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி

Penbugs

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசுக்கு கொரோனா…!

Penbugs

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையம் அரசுடைமையானது.

Penbugs

மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை

Penbugs

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு ஆலோசனை

Penbugs