Coronavirus Editorial News Editorial News

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

108 சேவைக்கு புதிய வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவங்கி வைத்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனா பாதித்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம்தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

இதன்படி தமிழகம் முழுவதும் தற்போது 1,005 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகிறது. இந்த சேவையை விரிவுபடுத்த 500 ஆம்புலன்ஸ் வாகனங்களை கூடுதலாக கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்பாட்டிற்கு வழங்குவதாக முதல்வர் அறிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து, முதற்கட்டமாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

இதில் அரசு சார்பில் 90 வாகனங்களும், தனியார் நிறுவனம் சார்பில் 18 வாகனங்களும் செயல்பட உள்ளன.

90 அவசர ஊர்திகளில் 10 வாகனங்கள் ரத்த சேவை பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த அவசர வாகனங்கள் தமிழகம் முழுவதும் பிரித்து அனுப்பப்படும். தொடர்ந்து, சில தினங்களில் மீதமுள்ள அவசர வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

Messi beats Ronaldo; wins Ballon d’Or for 6th time

Penbugs

தமிழகத்தில் இன்று 6185 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Devendra Fadnavis sworn in as Maharashtra CM

Penbugs

Man arrested for pregnant elephant’s death in Kerala

Penbugs

COVID19 information: School student, brother develop chatbot for Chennai Corporation

Penbugs

சிபிஎஸ்இ – பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு

Penbugs

COVID19: Single street in Triplicane has whooping 42 positive cases

Penbugs

தமிழகத்தில் இன்று 6045 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Sundar Pichai promoted as Alphabet’s CEO, Google’s parent company!

Penbugs

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3861 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

I suffer from anxiety, exercise keeps me in check: Shruti Haasan

Penbugs

Leave a Comment