Editorial News

1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக ஓலா நிறுவனம் அறிவிப்பு

ஊரடங்கு காரணமாக வருவாய் குறைந்ததால், 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக வாடகை கார் சேவை வழங்கி வரும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால், ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அளித்துள்ளார். அதில், கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், கடந்த 2 மாதங்களாக நிறுவனத்தின் வருவாய் 95 சதவீதம் குறைந்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தப் பிரச்சனையின் தாக்கம் நீண்ட காலம் இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். பணி நீக்கப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 3 மாத அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் புதிய வேலை கிடைக்கும் வரை அல்லது நடப்பு ஆண்டு இறுதி வரை மருத்துவம், ஆயுள், விபத்து காப்பீடுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Related posts

Tamil Nadu stops issuing EWS certificates

Penbugs

சென்னை மெட்ரோ ரயிலில் 50% கட்டணம் தள்ளுபடி

Kesavan Madumathy

இனி ஆன்லைனில் மீன் வாங்கலாம் – இணையதள செயலியை அறிமுகப்படுத்திய மீன்வளத்துறை

Penbugs

Coronavirus: New Zealand comes up with Teddy spotting during isolation

Penbugs

கலைஞரும்… பேராசிரியரும்…

Penbugs

Delhi Court acquits Priya Ramani in MJ Akbar defamation case

Penbugs

Unnao Rape survivor’s lawyer, who survived the car crash last year, dies

Penbugs

கொரோனாவினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் தர தயார் – கேப்டன் விஜயகாந்த் ..!

Penbugs

ஆமிர்கானின் உதவியாளர்‌ மரணம் : இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஆமிர்

Penbugs

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்

Penbugs

Daughter of tea seller, Aanchal Gangwal, is now an Air Force Officer

Penbugs

Ponnambalam hospitalized; Kamal Hassan lends financial help

Penbugs