Coronavirus

கொரோனா: அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட்டை பயன்படுத்த வேண்டாம்; இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட்டில் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

கொரோனா நோய் தொற்று இருப்பதை விரைவாக கண்டறிய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற பரிசோதனை கருவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டன.

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், ரேபிட் கிட்டின் பரிசோதனை முடிவுகள் துல்லியமானதாக இல்லை எனக்கூறி ராஜஸ்தான் அரசு நிறுத்திவைத்தது.

இந்த நிலையில், அடுத்த இரு நாட்களுக்கு கொரோனாவைக் கண்டறிய ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ அராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ரேபிட் கிட் கருவிகள் மாறுபட்ட முடிவுகளை காட்டுவதாக வெளியான தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகளின் தரத்தினை பரிசோதித்து வருகிறோம், மீண்டும் இந்தக் கருவிகளை கொண்டு சோதனையை தொடங்குவது பற்றி விரைவில் அறிவுறுத்தல் வழங்கப்படும் ” என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று 5,471 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

Penbugs

Watch: 100YO COVID survivor gets warm welcome from neighbours

Penbugs

கொரோனா வார்டில் தீ : ஆந்திராவில் சோகம்

Penbugs

ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,272 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

Penbugs

அன்புள்ள பிரதமர் மோடிக்கு.. மன்மோகன்சிங் கடிதம்

Kesavan Madumathy

How to register for COVID19 vaccine- Step by step guide

Penbugs

தமிழகத்தில் இன்று 6227 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Sonu Sood launches toll free number to help migrant workers reach home

Penbugs