Editorial News

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவலர் முருகனின் ஜாமீன் மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமை காவலர் முருகன் ஜாமீன் கேட்டு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி தாண்டவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

காவலர் முருகன் மற்றும் சி.பி.ஐ தரப்பில் வழக்கறிஞர்கள் காணொலிக் காட்சி வாயிலாக வாதிட்டனர். வழக்கு தொடக்க நிலை விசாரணையில் இருப்பதாலும், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாலும் காவலர் முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சி.பி.ஐ தரப்பு வாதிட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனிடையே, சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், முதுகு வலி காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

Daniel Radcliffe responds to Jk Rowling’s anti-trans tweets

Penbugs

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

ஹத்ராஸ் நகருக்கு நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி கைது

Penbugs

Varalaxmi Sarathkumar on casting couch: Despite being a star kid, it happens to me

Penbugs

Asha Bhosle launches digital show ‘Asha ki Asha’ to highlight talented singers

Penbugs

14YO game addict fakes his kidnapping, demands Rs 5L

Penbugs

Woman gets married to a chandelier

Penbugs

Breaking: Olympics to be postponed to 2021, says IOC member

Penbugs

Mayank becomes youngest Indian judge at 21

Penbugs

Donkey arrested in Pakistan along with eight people for gambling

Penbugs

புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டம் – திமுக தலைவர் ஸ்டாலின்

Penbugs

Rio Raj and Sruthi blessed with baby girl

Penbugs

Leave a Comment