Editorial News

எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது’ மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

மாநிலத்தின் மீது எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தமிழில் டிவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

கல்விக்கொள்கை வரைவு அறிக்கை வெளியானபோதே, தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்தநிலையில் புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தநிலையில் மீண்டும் அதில் உள்ள கருத்துகளுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

இதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வந்தாலும், எதிர்ப்புக்குரல் வலுத்துக்கொண்டே இருக்கிறது.

இதற்கிடையில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி பேசிய உரையின் தமிழாக்க வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

மேலும் அதில் தேசம் வெல்ல தேசிய கல்விக்கொள்கை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை சுட்டிக்காட்டி மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தன்னுடைய ‘டிவிட்டர்’ பக்கத்தில் தமிழில் கருத்துகளை பதிவு செய்து இருந்தார்.

அதில் அவர், ‘பொன்.ராதாகிருஷ்ணன்ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம்.

மத்திய அரசு, எந்த ஒரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

China’s Wuhan bans eating, hunting of wild animals

Penbugs

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

Penbugs

Former female prisoners sexually abused for toilet paper in New Jersey

Penbugs

Greater Chennai Corporation creates new Hashtag to address fake news

Penbugs

அயோத்தியில் கட்டப்படும் ஸ்ரீராமர் கோவிலின் சிறப்பம்சங்கள்

Kesavan Madumathy

Key Milestones of Vajpayee’s political career

Penbugs

அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!

Penbugs

இந்தியாவின் கடைசி முடிசூடிய மன்னர் ஓர் தமிழன்!

Penbugs

Selena Gomez’s Rare Beauty announces $100M Impact Fund for mental health services

Penbugs

Reddit co-founder Alexis quits board, wants to be replaced by black candidate

Penbugs

Leave a Comment