Coronavirus

5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் அளிக்கப்படும் – அமைச்சர் காமராஜ்

நியாய விலைகடைகளில் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இலவச பொருள்களுடன் சேர்த்து, இலவச முகக்கவசமும் அளிக்கப்படுமென உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கோடம்பாக்கம் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் உள்ளிட்ட நோய்த் தடுப்பு பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் கொரோனா விழிப்புணர்வு நாடகத்தை பார்வையிட்டதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருப்பதாகவும், 73 புள்ளி 13 சதவீதம் பேர் குணமடைந்துள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பெயர்கள் உள்ளன. அதில் ஒவ்வொருவருக்கும் 2 இலவச முகக்கவசங்கள் வழங்குவதாக முடிவு செய்யபட்டு 13 கோடியே 48 லட்சத்து 31ஆயிரத்து 798 முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன. மறு முறை பயன்படுத்தும் முகக் கவசமாக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் இலவச பொருட்களுக்கான டோக்கன் ஆகஸ்ட் 1,3,4ம் தேதிகளில் வீடு வீடாக விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

COVID19: Karnataka students climb hill for internet for online classes

Penbugs

ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை: உ.பி.அரசு உத்தரவு

Penbugs

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்

Penbugs

தமிழகத்தில் இன்று 4024 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு அரசு பணி

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 2532 பேர் பாதிப்பு …!

Kesavan Madumathy

More than 200 Tablighi Jamaat members, recovered, pledges to donate plasma

Penbugs

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Kesavan Madumathy

முதல்வருடன் ஆலோசனைக்கு பின்னர் மருத்துவக்குழுவினரின் பேட்டி

Penbugs

Anrich Nortje tested positive for COVID19

Penbugs

கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வந்தது

Penbugs

Leave a Comment