கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
தமிழகத்தில் இன்று மட்டும் 945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரையில், 8,62,374 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 71,888 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரையில், 1,81,66,462 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 12,564 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இன்று மட்டும் சென்னையில் 395 பேருக்கும், செங்கல்பட்டில் 103 பேருக்கும், கோயம்புத்தூரில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் முக கவசம் , சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.