Coronavirus Editorial News

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு வயது 56. இவர் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூலை 8ஆம் தேதி காவல் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார்.

8ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை 6 நாட்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் ஜூலை 14ம் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரிடம் சிபிஐ காவல் விசாரணை நடத்தப்படாத நிலையில் கடந்த 24ம் தேதி கொரோனோ தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் ஏற்கனவே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனோ பாதிப்பு ஏற்பட்டதால் உடல் நிலை மோசமாகி கடந்த 8ம் தேதி ஐசியு வார்டிற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Related posts

தமிழகத்தில் இன்று 5524 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

5YO dies after hot Sambhar vessel falls on him

Penbugs

UK: Woman with two wombs, carrying twins in each

Penbugs

தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Penbugs

Deepika Padukone tests COVID19 positive after her family

Penbugs

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

Penbugs

தமிழகத்தில் இன்று 5612 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னை, செங்கல்பட்டு நீங்கலாக தமிழகத்தில் மால்கள் திறப்பு.! Chennai, Chenagalpattu neengalaaga thamizhagaththil maalgal thirappu

Penbugs

தமிழகத்தில் இன்று 4515 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Lockdown means no sanitary napkins for Government school kids

Penbugs

“Baby Shark” beats Despacito, becomes most-watched video on YouTube

Penbugs

Karthik Dial Seytha Yenn- Nostalgic ride that we all needed to get through lockdown

Penbugs

Leave a Comment