Coronavirus Editorial News

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு வயது 56. இவர் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூலை 8ஆம் தேதி காவல் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார்.

8ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை 6 நாட்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் ஜூலை 14ம் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரிடம் சிபிஐ காவல் விசாரணை நடத்தப்படாத நிலையில் கடந்த 24ம் தேதி கொரோனோ தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் ஏற்கனவே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனோ பாதிப்பு ஏற்பட்டதால் உடல் நிலை மோசமாகி கடந்த 8ம் தேதி ஐசியு வார்டிற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Related posts

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நல்லக்கண்ணு ஐயா..!

Kesavan Madumathy

கொரோனா வைரஸ் ; தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு ‌…!

Penbugs

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் பாடகர் எஸ்பிபி

Penbugs

Kamal Haasan launches “Naame Theervu” to help needy in TN

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Kanpur man returns home 2 days after being buried by family

Penbugs

Mayank becomes youngest Indian judge at 21

Penbugs

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் கனவு நனவாகியது- அத்வானி

Penbugs

சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

Penbugs

Blush!

Penbugs

சமூக இடைவெளியில் அசத்தும் மிசோரம்

Penbugs

Leave a Comment