Editorial News Editorial News

அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

உள் ஒதுக்கீடு மூலம், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டண சிரமத்தை தவிர்க்கும் வண்ணம், Post Matric கல்வி உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகைத் திட்டங்கள் மூலம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் தாம் அறிவித்ததாக, முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில், உதவித்தொகைக்காக காத்திராமல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை, அரசே நேரடியாக செலுத்தும் என்றும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதற்காக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டிருப்பதாக, முதலமைச்சர் கூறியுள்ளார்.
அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் எனத் தெரிந்த பின்பும், திமுக உதவுவதாக அறிவித்திருப்பது, ஒரு அரசியல் நாடகமே என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Related posts

17-year-old Dalit youth shot dead for entering a temple in Uttar Pradesh

Penbugs

Thai MP caught watching porn on phone during budget meeting

Penbugs

Don’t want to be judged by my religion: Irrfan Khan’s son Babil

Penbugs

Rare: Yellow turtle rescued in Odisha’s Balasore District

Penbugs

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

Penbugs

Sushant Singh’s death: CBI files FIR, names Rhea Chakraborty as accused

Penbugs

Hyderabad Vet murder case: All four accused shot dead

Penbugs

China’s Wuhan bans eating, hunting of wild animals

Penbugs

உலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்…!

Kesavan Madumathy

அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்

Penbugs

Raghava Lawrence to build 1st Transgender home in India; Akshay Kumar donates 1.5 crores

Penbugs

Leave a Comment