Editorial News Editorial News

அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

உள் ஒதுக்கீடு மூலம், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டண சிரமத்தை தவிர்க்கும் வண்ணம், Post Matric கல்வி உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகைத் திட்டங்கள் மூலம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் தாம் அறிவித்ததாக, முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில், உதவித்தொகைக்காக காத்திராமல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை, அரசே நேரடியாக செலுத்தும் என்றும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதற்காக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டிருப்பதாக, முதலமைச்சர் கூறியுள்ளார்.
அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் எனத் தெரிந்த பின்பும், திமுக உதவுவதாக அறிவித்திருப்பது, ஒரு அரசியல் நாடகமே என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Related posts

Dr Harsh Vardhan to take charge as WHO Executive Board chairman on May 22: Officials

Penbugs

The captain’s go-to bowler-Neil Wagner

Penbugs

9YO sends ‘happiness’ puzzle to cheer the Queen, receives Thank you note

Penbugs

திறக்கப்படும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடம்

Kesavan Madumathy

Cristiano Ronaldo tested positive for coronavirus

Penbugs

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்குத் தடை: தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

தாதாசாகேப் தென்னிந்திய சினிமாவிருதுகள் அறிவிப்பு 2020: அஜித், ஜோதிகாவுக்கு விருது

Penbugs

Let us all unite against NEET: Suriya

Penbugs

இந்தியா வந்து சேர்ந்த ரஃபேல் போர் விமானங்கள்

Penbugs

UP farmer’s son who scored 98.2% will head to Cornell University

Penbugs

Leave a Comment