Editorial News Editorial News

அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

உள் ஒதுக்கீடு மூலம், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டண சிரமத்தை தவிர்க்கும் வண்ணம், Post Matric கல்வி உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகைத் திட்டங்கள் மூலம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் தாம் அறிவித்ததாக, முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில், உதவித்தொகைக்காக காத்திராமல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை, அரசே நேரடியாக செலுத்தும் என்றும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதற்காக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டிருப்பதாக, முதலமைச்சர் கூறியுள்ளார்.
அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் எனத் தெரிந்த பின்பும், திமுக உதவுவதாக அறிவித்திருப்பது, ஒரு அரசியல் நாடகமே என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Related posts

தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை நீங்கும் ,தடை தொடரும்…?

Penbugs

இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

Penbugs

தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என‌ அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

Picture of two widowed penguins comforting each other wins top photography award

Penbugs

MS Dhoni- Sakshi Dhoni to produce Mythological sci-fi webseries

Penbugs

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு முடிவு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

Penbugs

OMR Food Street, Thoraipakkam-The other side of the story!

Penbugs

To avoid plastic pollution, Sikkim introduces bamboo water bottles for tourists

Penbugs

Costa Rica becomes 1st Central American country to legalize same sex marriage

Penbugs

UN Honours Kerala Health Minister KK Shailaja

Penbugs

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

Leave a Comment