Coronavirus Editorial News

பீக் ஹவர்ஸை தவிர மற்ற நேரங்களில் பயணிகள் செல்ல அனுமதி

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை பொதுமக்கள் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு தெற்கு ரயில்வே தினசரி 244 புறநகர் சிறப்பு மின்சார ரயில்களை இயக்கி வருகிறது. இதற்கிடையே, கடந்த மாதம் 23-ம் தேதி முதல் அத்தியாவசிய பணிகள் பட்டியலின்கீழ் வராத பெண் பயணிகளை சாதாரண நேரங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் பயணிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது.

இருப்பினும், அத்தியாவசிய பணியாளர் பட்டியலின்கீழ் வராத பெண் பயணிகள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பயணிக்க அனுமதி இல்லை. மற்ற நேரங்களில் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மின்சார ரயில்களில் நாளை பொதுமக்கள் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், பீக் ஹவர்சில் பொதுமக்கள் மின்சார ரயில்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் (10 AM – 4 PM) அனைவரும் பயணம் செய்ய தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

Related posts

Sachin Tendulkar donates Rs 1 crore to Mission Oxygen

Penbugs

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: முதல்வர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

Penbugs

India likely to pull out of tri-series due to increasing COVID19 cases

Penbugs

தமிழகத்தில் இன்று 1779 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Kesavan Madumathy

Lockdown likely to be extended: Modi to opposition leaders

Penbugs

தமிழகத்தில் இன்று 6006 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Lockdown: Woman gangraped in a school at Rajasthan

Penbugs

சென்னையில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5,471 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

Penbugs

Norway PM fined by Police over COVID violations

Penbugs

Leave a Comment