Coronavirus

கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக அரசு

Experts committee recommends extended lockdown for TN

தமிழகத்தில் ஆறாம் தேதி முதல் இருபதாம் தேதி வரை புதிய கொரோனா கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிக பட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசுப் பேருந்துகள் மற்றும் வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம் எனவும், மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் எந்தத் தடையுமின்றி நடைபெறலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டுமே வழங்க வேண்டும்; தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறுதி ஊர்வல நிகழ்ச்சிகளில் 20 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கம்போல் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு-தமிழக அரசு

Penbugs

“கொரோனாவை கட்டுப்படுத்தும் கால அளவு இறைவனுக்குத்தான் தெரியும்!” – முதல்வர் பழனிசாமி

Kesavan Madumathy

COVID19: Pune man wears Gold Mask worth Rs 2.89 Lakhs

Penbugs

Coronavirus: PM Modi announces CARES fund for donations

Penbugs

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

Penbugs

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

Viral : Minister Sellur Raju addresses masks as napkins

Penbugs

தமிழகத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 63.45 சதவிகிதம் ஆக உயர்வு

Kesavan Madumathy

The Batman shoot suspended as Robert Pattinson tests COVID19 positive

Penbugs

Mashrafe Mortaza recovers from COVID19

Penbugs

நவம்பர் 16-ம் தேதி முதல் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

Leave a Comment