அமிதாப் பச்சன் ,அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோா் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 11-ஆம் தேதி மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
அங்கு அவா்களுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினாா்.
முன்னதாக, அமிதாபின் மருமகளும், நடிகையுமான ஐஸ்வா்யா ராய் , அவரின் பேத்தி ஆராத்யா ஆகியோா் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் பூரண குணமடைந்து சமீபத்தில் வீடு திரும்பினா்.
இந்நிலையில் கடந்த 26 நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அபிஷேக் பச்சன் இன்று கொரோனோ தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .